Saturday, June 25, 2005

காவிரி தண்ணீர்

1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயற்சி செய்தது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
பின்பு 1835 ம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரை திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.
1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அனுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமிஅய்யரின் முன்டனேர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்ளே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெறிவிக்வே; தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோரும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்னர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30.00,000/-க்கு 1 லட்டசம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமிஅய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதகடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்dதலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.
அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த STANLY என்ற பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும்
1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும்
அன்று கர்னாடகா தண்ணீரால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டது என நாம் போராடப்போய் ; இன்ற தண்ணீர் இல்லை என போராட வேண்டியிருக்கிறது..

தமிழக மன்னர்கள் மைசூர் மன்னருக்கு கப்பம் கட்டிய காலம் அது வெள்ளையருக்கு ஒரு பகுதி வரி வசூல் தானே தவிர முழுஆளுமையுமில்லை
மேலும் ஒரு இடத்தில் அணைகட்டினால் பல கிராமங்களை தூக்க வேண்டி வரும்
மேட்டூர் நீர்த் தேக்கத்தில் பல கிராமங்களும் கோவில்களும் உள்ளன. இன்றும் தண்ணீர் குறைந்ததும் அந்த கோவில்கள் தெரியம் அங்கிருந்த கிராமத்தை வேறு இடங்களுக்கு மாற்றி இருப்பர். அவைகள் அணைத்தும் கர்ணாடகா வைச் சேர்நதவை பல்லாயிரகணக்காண நஞ்சை புஞ்சை நிலங்களும் தற்போது நீரில் மூழ்கியிருக்கும் . அணை தமிழக மாயிருப்பினும் நிர்பிடிப்புபகுதி கர்ணாடகா.

3 comments:

சுந்தரவடிவேல் said...

அப்போது மேட்டூர் சென்னை மகாணத்துக்குள்தானே இருந்தது? பின் ஏன் மைசூரிடம் அனுமதி வாங்க வேண்டும்? சரி அப்படியே ஒரு அண்டை மாநிலத்திடம் அனுமதி வாங்க வேண்டுமென்றால் கர்நாடகா கட்டியிருக்கும் அத்தனை அணைகளுக்கும் தமிழ்நாடு/சென்னையிடம் அனுமதி வாங்கியதா? அந்த அனுமதியைக் கொடுத்தது யார்? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி.

இரா.சுகுமாரன் said...

தங்களின் வரலாற்றுத் தகவலுக்கு நன்றி

ENNAR said...

நல்லது சுகுமாரன்